இலங்கை வரும் ஐரோப்பிய பயணிகளின் நன்மைக்காக ஆரம்பமாகும் விமான சேவை
கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிக்க இலங்கை திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல் இலங்கைக்கான துருக்கிய தூதுவருக்கும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கும் இடையில் நேற்று இடம்பெற்றது.

ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள்
தற்போது துருக்கி ஏர்லைன்ஸ் இலங்கைக்கு விமானப் பயணத்தை மேற்கொண்டாலும் அது மாலைதீவு ஊடாகவே பயணிக்கின்றது.

துருக்கிய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வரும்போது இது ஒரு அசௌகரியம் மற்றும் அவர்கள் கூடுதலாக ஒன்றரை மணிநேர பயண நேரத்தை செலவிட வேண்டியுள்ளது.
அந்த நேரத்தை குறைப்பதே நோக்கமாகும். இந்த புதிய சேவையானது ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகளுக்கு நன்மை பயப்பது மட்டுமன்றி, இலங்கைக்கு வருகை தருவதற்கு அவர்களை ஊக்குவிக்கும்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan