இலங்கைப் பெண்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை - இலங்கைத் தூதரகத்தின் செயலாளர் மறுப்பு
தம்மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் இலங்கைப் பெண்களை பாலியல் தொழிலுக்காக கடத்துவதில் ஈடுபட்ட குற்றச்சாட்டை, ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் ஈ. குஷான் மறுத்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகள் ஜோடிக்கப்பட்டவை என்றும் எந்த ஆதாரமும் இல்லை என்றும், அவர் கொழும்பின் ஊடகம் ஒன்றிடம் கூறியுள்ளார்.
சுற்றுலா வீசா வழங்கல் நிறுத்தம்
சுற்றுலா வீசா வழங்குவதை நிறுத்துமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு தாம் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் பெண்கள், இலங்கை அரசால் பதிவு செய்யப்பட்டே ஓமான்
மற்றும் டுபாய்க்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.