பின்லாந்தில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை பெண்
பின்லாந்தில் இலங்கை பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பிரபல யூடியூப் சேனலை நடத்தி வந்த இலங்கையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இக்கொலை தொடர்பில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
உயிரிழந்த பெண்
உயிரிழந்த பெண் தனது குடும்பத்துடன் நீண்ட காலமாக பின்லாந்தில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை குடும்பத்தின் வீட்டுக்குச் சென்ற அயலவர் வீட்டின் கதவுக்கு அருகில் பெரிய இரத்தக்கறை இருப்பதை முதலில் கண்டதாகவும் கூறப்படுகிறது.
மேலதிக விசாரணை
பின்னர் அவர், குறித்த பெண் உயிரிழந்து கிடப்பதைக் கண்டதாகவும், பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri

ஆயுத ஏற்றுமதியில் சாதனை படைத்த நாடு - ஜேர்மனி, இந்தியா உட்பட பல நாடுகள் முக்கிய வாடிக்கையாளர்கள் News Lankasri

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri
