வெளிநாடொன்றில் இலங்கை மாணவியின் மோசமான செயல் - 7 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் சாத்தியம்
சிங்கப்பூரில் இலங்கையை சேர்ந்த யுவதி ஒவர் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார்.
இலங்கையை சேர்ந்த 22 வயதான விஷ்வா மாதவி என்ற யுவதி, சிங்கப்பூர் இராணுவத்தினர் போன்று ஆள்மாறாட்டம் செய்து போலி உணவு ஒர்டர்களை வழங்கிய மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இலங்கை மாணவி, தனது DBS வங்கிக் கணக்கின் உள்நுழைவு விவரங்களை தெரியாத நபருக்கு சட்டவிரோத நோக்கத்திற்காக வழங்கியதாக கணனி துஷ்பிரயோகச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டது.
உணவுப் பொருட்கள்
அவரது வங்கிக் கணக்கு, மொத்த உணவுப் பொருட்கள் வாங்கும் போலி ஒன்லைன் ஓர்டர்களுடன் தொடர்புடைய பாரிய நிதியை பெற பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொள்வதாக குறித்த இலங்கை யுவதி, சிங்கப்பூர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இது தொடர்பான வழங்கு எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதியன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், இலங்கை பெண்ணுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை, 50,000 சிங்கப்பூர் டொலர் அபராதம், அல்லது இரண்டும் எதிர்கொள்ள நேரிடும் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.



