மில்லியன்கணக்கான தங்கத்தை இந்தியாவிற்கு கடத்திய இலங்கையர்
சட்டவிரோதமான முறையில் 65 லட்சம் ரூபா பெறுமதியான தங்கத்தை இந்தியாவிற்கு கொண்டு சென்ற இலங்கையர் ஒருவர் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் வைத்திருந்த தங்கத்தின் எடை ஒரு கிலோவுக்கும் அதிகம் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கல்ப் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் பஹ்ரைனில் இருந்து வந்த 33 வயதான இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த இலங்கையர் தொடர்ந்து இந்தியா மற்றும் வளைகுடா நாடுகளுக்குச் சென்று தங்கம் கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி அன்று, 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்துடன் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் 42 வயதான சூடான் பெண்ணும் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த தக் லைஃப்.. இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri
