சென்னைக்கு புறப்பட்ட 5 நிமிடங்களில் திடீரென தரையிறங்கிய இலங்கை விமானம்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் மதுரை நோக்கி இன்று (28) பிற்பகல் புறப்பட்ட இலங்கை விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பட்ட 5 நிமிடங்களில் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலையப் பொறுப்பதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த விமானம் பிரான்சில் தயாரிக்கப்பட்ட Airbus-321 Neo ரக விமானம் ஆகும், இதில் 41 பயணிகள் மற்றும் 08 பணியாளர்கள் பயணம் செய்துள்ளனர்.

திடீரென தரையிறக்கப்பட்ட விமானம்
இந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மதியம் 02.02 மணியளவில் மதுரைக்கு புறப்பட்டு 05 நிமிடங்களுக்குப் பின்னர் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் 02.07 மணியளவில் தரையிறங்கியுள்ளது.

மேலும் விமானத்தில் பயணம் மேற்கொண்ட பயணிகள் மற்றும் பணியாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், விமானம் பழுது நீக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
குறித்த விமானம் இந்தியாவின் மதுரைக்கு மீண்டும் புறப்படும் சரியான நேரத்தை விமான நிலையம் அறிவிக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.
தமிழின அழிப்பில் முன்னேறிச் செல்லும் பௌத்த சிங்கள அரசியல் 14 மணி நேரம் முன்
மீண்டும் குக் வித் கோமாளி செட்டிற்கு வந்த அந்த ஒரு பிரபலம்.... யார் பாருங்க, மாஸான புரொமோ இதோ Cineulagam
இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் துணையாக இருப்பேன்..ஆனால் மோடி இருந்தால்தான் - ட்ரம்ப் News Lankasri