சென்னைக்கு புறப்பட்ட 5 நிமிடங்களில் திடீரென தரையிறங்கிய இலங்கை விமானம்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் மதுரை நோக்கி இன்று (28) பிற்பகல் புறப்பட்ட இலங்கை விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பட்ட 5 நிமிடங்களில் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலையப் பொறுப்பதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த விமானம் பிரான்சில் தயாரிக்கப்பட்ட Airbus-321 Neo ரக விமானம் ஆகும், இதில் 41 பயணிகள் மற்றும் 08 பணியாளர்கள் பயணம் செய்துள்ளனர்.

திடீரென தரையிறக்கப்பட்ட விமானம்
இந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மதியம் 02.02 மணியளவில் மதுரைக்கு புறப்பட்டு 05 நிமிடங்களுக்குப் பின்னர் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் 02.07 மணியளவில் தரையிறங்கியுள்ளது.

மேலும் விமானத்தில் பயணம் மேற்கொண்ட பயணிகள் மற்றும் பணியாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், விமானம் பழுது நீக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
குறித்த விமானம் இந்தியாவின் மதுரைக்கு மீண்டும் புறப்படும் சரியான நேரத்தை விமான நிலையம் அறிவிக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.
இராணுவ புலனாய்வு வட்டாரத்தில் இரகசிய குறியீட்டில் அழைக்கப்பட்ட கோட்டாபய மற்றும் பிள்ளையான்: அம்பலமான தகவல்கள்
புதைக்கப்பட்டிருந்த சிறுமியின் இரத்தம் தோய்ந்த ஆடை.. பொலிஸாரை கத்தியால் துரத்த வேண்டிய நிலையில் அதிகாரிகள்
அடுத்துவரும் 3 நாட்களுக்கு வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
குடும்பத்தினரைப் பார்க்காமல் நான்கு ஆண்டுகள்... வெளிநாட்டில் கோர விபத்தில் சிக்கிய ஆசிய இளைஞர் News Lankasri