தமிழ்நாட்டில் இலங்கை தமிழ் இளைஞர்கள் மூவர் பலி!
தமிழ்நாட்டில் இடம்பெற்ற விபத்தொன்றில் இலங்கையை சேர்ந்த மூன்று தமிழ் இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாடு-கும்மிடிபூண்டி அகதி முகாமை சேர்ந்த மூன்று இலங்கை தமிழ் இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
விபத்திற்கான காரணம்
திருவள்ளுரில் பணிபுரியும் இவர்கள் தங்கள் வீடுகளிற்கு திரும்பிக்கொண்டிருக்கையில், அவர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தயாளன் ( 19)சார்ல்ஸ் (21) ஜோன்( 20 ) ஆகிய மூவரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
மேலும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த இவர்கள், தங்கள் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தி வீடியோ எடுக்க முயற்சித்த போது, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து லொறியுடன் மோதியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |