தமிழ்நாட்டில் இலங்கை தமிழ் இளைஞர்கள் மூவர் பலி!
தமிழ்நாட்டில் இடம்பெற்ற விபத்தொன்றில் இலங்கையை சேர்ந்த மூன்று தமிழ் இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாடு-கும்மிடிபூண்டி அகதி முகாமை சேர்ந்த மூன்று இலங்கை தமிழ் இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
விபத்திற்கான காரணம்
திருவள்ளுரில் பணிபுரியும் இவர்கள் தங்கள் வீடுகளிற்கு திரும்பிக்கொண்டிருக்கையில், அவர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தயாளன் ( 19)சார்ல்ஸ் (21) ஜோன்( 20 ) ஆகிய மூவரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
மேலும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த இவர்கள், தங்கள் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தி வீடியோ எடுக்க முயற்சித்த போது, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து லொறியுடன் மோதியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |