13 நாடுகளை தோற்கடித்த தமிழ் மாணவன் - மனக்கணித போட்டியில் படைத்த சாதனை
மலேசியாவில் இடம்பெற்ற சர்வதேச “I CAM ABACUS” மனக்கணித போட்டியில் முல்லைத்தீவு கலைமகள் வித்தியாலயத்தை சேர்ந்த துஷ்யந்தன் காருஜன் என்ற 9 வயது சிறுவன் முதலாம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
கடந்த 03.04.2026 அன்று சுஹதாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற தேசிய மட்ட I CAM ABACUS மனக்கணித போட்டியில் நாடளாவிய ரீதியில் பலர் பங்கு கொண்ட போட்டியில் வெற்றி பெற்று குறித்த மாணவன், சர்வதேச I CAM ABACUS மனக்கணக்கு போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இலங்கையை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்த ஈஸ்டர் தாக்குதல்: சுரேஷ் சலேயைக் காப்பாற்ற துடிக்கும் அரசியல்வாதிகள்
சாதனை படைத்த தமிழ் மாணவர்கள்
இந்த சர்வதேச போட்டி கடந்த 4ஆம் திகதி மலேசியாவில் ஜென்ரிங் ஹைலண்ட் எனும் இடத்தில் இடம்பெற்றிருந்தது குறித்த போட்டியில் 13 நாடுகளைச் சேர்ந்த 2500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில், இலங்கையில் இருந்து மாணவர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர் குறித்த மாணவன் level 1 B பிரிவில் 1ஆம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.

இதேவேளை, குறித்த போட்டியில் முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தில் கல்வி கற்றுவரும் ச.தக்சவி எனும் மாணவி முதலாம் இடத்தையும், ஜெ.பார்த்தீவ் என்ற மாணவன் முதலாம் இடத்தையும், ப.தன்விஸ் என்ற மாணவன் இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

