சிங்களவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டிய விடயம்! சபையில் ஆவேசம்
பௌத்த சின்னங்கள் இருப்பதால் அது தாங்கள் வாழ்ந்த இடம் என தமிழர்களின் பூர்வீக இடங்களை சிங்களவர்கள் உரிமை கோருவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
அப்படியானால் சீனா, ஜப்பான், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் பௌத்த மதம் உள்ளதால், இங்கு குறிப்பிடுவதை போன்று அந்த நாடுகளையும் பௌத்த சிங்கள நாடு எனக் குறிப்பிட முடியுமா அல்லது பௌத்த சிங்களவர்கள் அந்த நாடுகளுக்கு உரிமை கோர முடியுமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் தமிழ் பௌத்தர்களே இலங்கையில் வாழ்ந்த வரலாறு இருப்பதை சிங்களவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
