இலங்கை ரூபா உயர்வடைந்ததன் பலன்! உணவுகளின் விலையை குறைக்க திட்டமிடும் அமைச்சு
இலங்கை ரூபாவின் மதிப்பு உயர்ந்துள்ள நிலையில், பேக்கரி மற்றும் உணவக பொருட்களின் விலைகளை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த உணவுப் பொருட்களின் விலை குறைப்பு வீதம் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையிடம் மக்கள் முறைப்பாடு செய்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ரூபாவின் மதிப்பு
இலங்கை ரூபாவின் மதிப்பு வலுவடைந்ததன் பலன் மற்றும் மூலப்பொருட்களுக்கான விலை குறைப்பு ஆகியவற்றின் பலனை மக்களுக்கு வழங்குவதற்கு பேக்கரி, உணவக உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்தார்களான என்பதை ஆராய்வதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், விலை குறைப்பு தொடர்பாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 12 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri