ஹரக் கட்டா தப்பிச் செல்ல உதவிய பொலிஸ் உத்தியோகத்தர் இந்தியாவில் கைது
ஹரக் கட்டா என்றழைக்கப்படும் பாதாள உலகப் புள்ளியான நந்துன் சிந்தக என்பவர், தப்பிச் செல்ல உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2023ம் ஆண்டின் செப்டம்பர் 10ஆம் திகதி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருந்த ஹரக் கட்டா, அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சியொன்றை மேற்கொண்டிருந்தார்.
எனினும், பொலிஸார் மிகுந்த சிரமத்துடன் அவரது முயற்சியை முறியடித்திருந்தனர். பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அதற்கு உதவியாகச் செயற்பட்டிருந்த நிலையில், பின்னர் அவர் அங்கிருந்து தப்பியோடி, நாட்டை விட்டும் வெளியேறியிருந்தார்.
நால்வர் கைது
இந்நிலையில், குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தற்போது இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவருடன் சேர்த்து இன்னும் நால்வரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 14 மணி நேரம் முன்
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri