ஹரக் கட்டா தப்பிச் செல்ல உதவிய பொலிஸ் உத்தியோகத்தர் இந்தியாவில் கைது
ஹரக் கட்டா என்றழைக்கப்படும் பாதாள உலகப் புள்ளியான நந்துன் சிந்தக என்பவர், தப்பிச் செல்ல உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2023ம் ஆண்டின் செப்டம்பர் 10ஆம் திகதி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருந்த ஹரக் கட்டா, அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சியொன்றை மேற்கொண்டிருந்தார்.
எனினும், பொலிஸார் மிகுந்த சிரமத்துடன் அவரது முயற்சியை முறியடித்திருந்தனர். பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அதற்கு உதவியாகச் செயற்பட்டிருந்த நிலையில், பின்னர் அவர் அங்கிருந்து தப்பியோடி, நாட்டை விட்டும் வெளியேறியிருந்தார்.
நால்வர் கைது
இந்நிலையில், குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தற்போது இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவருடன் சேர்த்து இன்னும் நால்வரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

துபாயில் இந்தியர்களை வாளால் வெட்டிக்கொன்ற பாகிஸ்தானியர்: அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் News Lankasri

Viral Video: நிலநடுக்கத்தால் குலுங்கிய வீடு... தம்பியை தரதரவென இழுத்துக் கொண்டு ஓடிய சிறுவன் Manithan

Optical illusion: உங்கள் கண்களை ஒரு நிமிடம் குருடாக்கும் மாயை...இதில் இருக்கும் இலக்கம் என்ன? Manithan

இன்று விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் முடிந்தது.. புதிய ஜோடியின் போட்டோ இதோ Cineulagam
