திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறங்கிய இலங்கை விமானம்
எரிபொருள் பற்றாக்குறையால் UL504 என்ற இலங்கை விமானம் திருவனந்தபுரத்தில் அவசரமாக நேற்று தரையிறங்கியுள்ளது.
இந்த விமானம் லண்டனில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்கிலாந்து கிரிக்கெட் போட்டிகளை முடித்துக் கொண்டு திரும்பிய கிரிக்கெட் வீரர்களுடன் பறந்த நிலையில் இவ்வாறு தரையிறங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்குவதற்காக விமானி விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு துறைக்கு அவசர செய்தி அனுப்பினார்.
முதலில் ஓமானின் மஸ்கட்டின் விமானத்தை தரையிறக்க முயற்சிகள் செய்தனர். ஆனால் மோசமான வானிலை காரணமாக அங்கு விமானம் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது.
சூழ்நிலையை புரிந்துகொண்ட விமான நிலைய அதிகாரிகளின் உத்தரவின்படி தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசரகால மீட்பு குழுவினர் உள்ளிட்ட அனைவரும் அடுத்த சில நிமிடங்களில் ஓடுபாதையில் அனைத்து வகையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடனும் தயாராக நின்றனர்.
இதன் பின்னர் விமானத்திற்கு தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து எரிபொருள் நிரப்பிய பின்னர், பிற்பகல் 2.45 மணிக்கு மீண்டும் விமானம் கொழும்புக்கு பறந்தது. .





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

இந்த புகைப்படத்தில் விஜய்யுடன் இருக்கும் பிரபல நடிகர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? இதோ பாருங்க Cineulagam
