பெங்களூரு விமான நிலையத்தில் இலங்கை பிரஜைகள் மூவர் கைது
இந்தியா, பெங்களூரின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் (KIA) சர்வதேச தங்க கடத்தல் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் மூன்று இலங்கை பிரஜைகளை விமான சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
மூவரும் கொழும்பில் இருந்து சென்ற நிலையில், கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
11.9 மில்லியன் இந்திய ரூபாய்
அவர்கள் தமது மலக்குடலில் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை அதிகாரிகள் குழு கண்டுபிடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 1,670.92 கிராம் எனவும், இதன் மதிப்பு சுமார் 11.9 மில்லியன் இந்திய ரூபாய்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மூவரும் தங்க கடத்தல் வலையமைப்பிற்கு முகவர்களாக பணியாற்றியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam
மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam
எதிரிகள் மரணத்தை ருசிப்பார்கள்... ட்ரம்பிற்கு ஈராக்கின் துணை இராணுவப் படை பகிரங்க எச்சரிக்கை News Lankasri