இலங்கையில் முதன்முறையாக முக்கிய பொலிஸ் பிரிவுகளுக்கு பெண் அதிகாரிகள் நியமனம்
இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதன்முறையாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) சிறப்புப் புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட முக்கியப் பிரிவுகளின் உயர் பதவிகளுக்கு பல பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் பேரில் நான்கு பெண்கள் உட்பட 54 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இடமாற்றங்களில், நான்கு துணை ஆய்வாளர்கள் ஜெனரல்களும் (DIGs) அடங்குவர்.
பதவி உயர்வு
பெண் நியமனங்களில், SSP இ.எம்.எம்.எஸ் தெஹிதெனியவுக்குப் பதிலாக, சி.ஐ.டி.யின் முன்னாள் பிரதிப் பணிப்பாளராக இருந்த எஸ்.எஸ்.பி எச்.டபிள்யூ.ஐ.எஸ்.முத்துமலை குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
புதிய எஸ்.எஸ்.பியாக நுகேகொட பிரிவுக்கு பொறுப்பேற்க தெஹிதெனிய இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்த சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.எம்.எல்.ஆர்.அமரசேன விசேட புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த எஸ்.எஸ்.பி ஆர்.ஏ.டி.குமாரி, பொலிஸ் களப் படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
எஸ்.எஸ்.பி பி.ஜி.எஸ் குணதிலக்கவும், முன்னர் ஐ.ஜி.பியின் செயலாளர் பிரிவுக்கு தலைமை தாங்கிய பின்னர், தற்போது மருத்துவ சேவைகள் பிரிவின் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பெண்களுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ... புகாரளித்த அதிகாரியை மிரட்டிய லண்டன் பொலிசார் News Lankasri
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri