வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் உண்ணாவிரதம் போராட்டம்

Indian fishermen Northern Province of Sri Lanka Sri Lanka Fisherman
By Parthiban Mar 20, 2024 12:41 PM GMT
Report

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலால், வடக்கு மாகாண கடற்றொழிலாளர்ளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து, தொடர் போராட்டங்களை முன்னெடுத்தபோதிலும், அதற்கு உரிய பதில் கிடைக்காத நிலையில் தமிழ் கடற்றொழிலாளர்கள் குழுவொன்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து, யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரிக்கு முன்பாக இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று (19) ஆரம்பித்துள்ளனர்.

இந்திய கடற்றொழிலாளர்களை தடுப்பது கடினம் என இலங்கை கடற்படைத் தளபதியும் தெரிவித்துள்ள நிலையில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் இன்றும் (20) தொடர்கின்றது.

கொழும்பில் மனைவியுடன் இணைந்து இசை நிகழ்ச்சியை ரசித்த ஜனாதிபதி

கொழும்பில் மனைவியுடன் இணைந்து இசை நிகழ்ச்சியை ரசித்த ஜனாதிபதி

பிரச்சினைக்கு தீர்வு

பொறுப்புக் கூறும் அதிகாரி வந்து தமது பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக உறுதியளிக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள யாழ்ப்பாணம் மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளனத்தின், செயலாளர் செபமாலை அன்புடன் செபராசா வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் உண்ணாவிரதம் போராட்டம் | Sri Lankan Fishermen Are On Hunger Protest

“உண்ணாவிரத போராட்டத்தை, நிச்சயமாக இதுல சாகும்வரை இருந்தே ஆகுவோம். எங்களுக்கு சரியான ஒரு தீர்வு வேணும். சரியான முடிவு வரும் வரைக்கும் அது யாராகவும் இருக்கலாம்.எங்கட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இங்க வந்து சந்திக்க விரும்பினால் சந்திக்கலாம்.

ஆனால் அவர்கள் எங்களுக்காக எந்தவொரு இடத்திலும் குரல் கொடுத்ததாக தெரியவில்லை. கடற்றொழில் அமைச்சராக இருந்தாலும் சரி. எங்கட ஜனாதிபதியாக இருந்தாலும் சரி அல்லது இந்த நாட்டின் யாரோ பொறுப்பான தலைவர் வந்து எங்களுக்கு சரியான உறுதிமொழி வழங்கும் வரையில் இந்த இடத்தில் இருந்து எழும்ப மாட்டோம் என்பதை உறுதியாக கூறிக்கொள்கின்றோம்.”

பதவி விலகினார் அனுரகுமார

பதவி விலகினார் அனுரகுமார

இந்திய உயர்ஸ்தானிகராலயம்

யாழ்ப்பாணம் மருதடி சந்தியில் இருந்து யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணை உயர்ஸ்தானிகராலயம் வரை ஆர்ப்பாட்ட பேரணியாக வந்த யாழ்ப்பாண கடற்றொழிலாளர்கள் அங்கு அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டதோடு பின்னர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் உண்ணாவிரதம் போராட்டம் | Sri Lankan Fishermen Are On Hunger Protest

துணை உயர்ஸ்தானிகராலயத்திற்கு அருகில் உண்ணாவிரதத்தை மேற்கொள்ள அனுமதிக்க முடியாது என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து, இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு அருகில் அமைந்துள்ள புனித ஜோன் பொஸ்கோ கல்லூரிக்கு முன்பாக உண்ணாவிரதத்தை ஆரம்பிக்க கடற்றொழிலாளர்கள் நடவடிக்கை எடுத்ததாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்திய கடற்றொழிலாளர்கள் வடக்கு கடலில் கடற்றொழிலில் ஈடுபடுவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரி வடபகுதி கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்த போதிலும் தமது பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை என தெரிவிக்கின்றனர்.

வேகமாக உயரும் இலங்கை ரூபா! டொலரின் தேய்வு நிலை

வேகமாக உயரும் இலங்கை ரூபா! டொலரின் தேய்வு நிலை

இலங்கைக் கடற்பரப்பு

இலங்கைக் கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் நூற்றுக்கணக்கான இந்தியக் கப்பல்களை 'அதிகளவான பலத்தை பயன்படுத்தி தடுக்க முடியாது.' என கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் உண்ணாவிரதம் போராட்டம் | Sri Lankan Fishermen Are On Hunger Protest

இந்திய கடற்றொழிலாளர்களின் கைது அரசியல் அழுத்தங்களுக்கும் வழிவகுக்கும் என கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா கடந்த மார்ச் 16ஆம் திகதி தி ஐலன்ட் (The Island) பத்திரிகையுடனான செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.

"நூற்றுக்கணக்கான கடற்றொழில் கப்பல்களை கைப்பற்றுவது நடைமுறையில் சாத்தியமில்லை. மேலும் இந்த கைதுகள் அரசியல் தாக்கங்களுக்கு வழிவகுக்கும். நாம் எல்லாவற்றையும் சிந்திக்க வேண்டும்."

வனிந்து ஹசரங்கவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

வனிந்து ஹசரங்கவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US