வெளிநாட்டுக்கு வேர்க் விசாவில் சென்ற இலங்கை தமிழர் கோர விபத்தில் பலி
இஸ்ரேலில் பணியில் இருந்த போது இலங்கையர் ஒருவர் கார் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இலங்கையரின் பூதவுடலை நாட்டுக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டாரா தெரிவித்துள்ளார்.
43 வயதான அந்தோணி ஞானபிரகாசம் என்ற நபரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மத சடங்குகள் மற்றும் இறுதி மரியாதை
அவர் கொழும்பு, முல்லேரியா நியூ டவுனில் வசிப்பவர் என தெரியவந்துள்ளது. குறித்த நபர் 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கட்டுமான துறையில் வேலை செய்வதற்காக இஸ்ரேலுக்கு சென்றிருந்தார்.

இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்த இலங்கையரின் குடும்பத்தினரின் வேண்டுகோளின் பேரில் அவரது பூதவுடலை நாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் பூதவுடலை இலங்கைக்கு அனுப்புவதற்கு முன் மத சடங்குகள் மற்றும் இறுதி மரியாதைகள் எதிர்வரும் 29 ஆம் திகதி இஸ்ரேலில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கார்க் தீவுக்கு குறி! முக்கிய வான்வழி படைத் தளபதிகள் மத்திய கிழக்கிற்கு அனுப்பும் அமெரிக்கா News Lankasri
திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam
ஆலிவர் பின்னால் இருக்கும் அந்த நபர் இவர்தானா, அடுத்த வில்லன் ரெடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam