அவுஸ்திரேலியாவில் கவனக்குறைவால் வீட்டினை இழந்த இலங்கை குடும்பம் - மீண்டெழ முடியாமல் தவிப்பு
அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் வசிக்கும் இலங்கை தம்பதி வீடற்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
டிலினி மற்றும் தினேஷ் அபேசிங்க என்ற தம்பதியின் வீடு தீ விபத்துக்கு உள்ளாகி முழுமையாக அழிந்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் முன்னர் பலத்த எதிர்பார்ப்புடன் இந்தத் தம்பதியினர் தமது புதிய வீட்டை நிர்மாணித்தனர்.
சிறிய கவனக்குறைவு
எனினும், அண்மையில் ஏற்பட்ட மோசமான தீ விபத்தில் வீட்டில் வசிக்க முடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சேமிப்பில் இருந்த பணத்தை கொண்டு இந்த வீட்டை நிர்மாணித்திருந்தனர். எனினும் சிறிய கவனக்குறைவு காரணமாக ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால், இந்த இழப்பிற்கு காப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், மீண்டும் ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவது அவர்களுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.
பொருளாதார நெருக்கடி
தற்போது இருவரும் அவுஸ்திரேலியாவில் பணியாற்றி வந்தாலும், பல வருடங்களாக சேர்த்த பணத்தை ஒரே நாளில் இழந்த நிலையில் அவர்கள் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளனர்.

வீட்டை மீண்டும் நிர்மாணிக்க சுமார் 700,000 முதல் 800,000 அவுஸ்திரேலிய டொலர்கள் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வீட்டினை நிர்மாணித்து வாழ்க்கை மாற்றியமைக்க, gofundme இணையத்தளம் ஊடாக தம்பதியினர் உதவி கோரியுள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமும் அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடும்..! 17 மணி நேரம் முன்
குழந்தைக்கு ஒரு வயது கூட ஆகல... பிக் பாஸ் சீசன் 10-ல் ஜாய் கிரிஸில்டா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள் Manithan