இலங்கை வந்த விமானத்தில் சிறுமிக்கு நேர்ந்த கதி
சவூதி அரேபியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய இந்தியர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
பேதரய்யா வதனாபில்லை என்ற 47 வயதுடைய இந்தியரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டு சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை சட்டத்தின் கீழ் ஒப்படைக்கப்பட்டது.
பொலிஸ் அறிக்கை
இதனையடுத்து இலங்கை குற்றவியல் சட்டத்தின் 345வது பிரிவின் கீழ் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார் என விமான நிலைய பொலிஸ் நிலைய பொலிஸ் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து இலங்கைக்கு வந்த ஸ்ரீலங்கான எயார்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான UL 266 என்ற விமானத்தில் இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது.
இதில் 8 வயதுடைய சிறுமி தகாத முறைக்கு உள்ளாக்கப்பட்டதாக விமான ஊழியர்களிடம் முறைப்பாடு செய்துள்ளதாக விமான நிலைய பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam
