பாக்கு நீரிணையை நீந்தி கடந்து சாதனை படைத்த இலங்கை இராணுவ சிப்பாய்
தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை பாக்கு நீரிணையை நீந்தி கடந்து மீள திரும்பி இலங்கை விமானப்படை வீரர் சாதனை படைத்துள்ளார்.
இலங்கை விமானப் படையின் ரொஷான் அபேசுந்தர என்பவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளதாக தெரியவருகிறது.
அவர் குறித்த சாதனையை 28 மணி 19 நிமிடங்கள் 58 விநாடிகளில் பதிவு செய்துள்ளார்.
இதேவேளை அவர் கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி 49 கிலோமீற்றர் கடல் பயணத்தை 23 மணிநேரத்தில் கடந்து தேசிய சாதனையை பதிவு செய்திருந்தார்.
இதற்கு முன்னர் 1971ஆம் ஆண்டு குமார் ஆனந்தன் என்பவர் பாக்கு நீரிணையை நீந்தி கடந்து மீள திரும்பிய முதலாவது இலங்கையர் என்ற சாதனையை படைத்தார்.
இந்த நிலையில் ரொஷான் அபேசுந்தர தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை பாக்கு நீரிணையை நீந்தி கடந்து மீள திரும்பிய இரண்டாம் இலங்கையர் என்பது குறிப்பிடத்தக்கது.  

                                            
                                                                                                                                    
    
    
    
    
    
    
    
    
    
    தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
    
    கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam