கடல் எல்லைகள் தெரியாமல் பேசும் அண்ணாமலை: முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு
அண்மைய நாட்களாக எல்லை தாண்டி இந்திய இழுவைமடு படகுகள் வருகை அதிகரித்துள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணைய தலைவர் கா.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் அவர் தனது அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடல் எல்லைகள் தெரியாமல் பேசும் அண்ணாமலை
இதேவேளை தாம் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்ற நிலையில் எல்லை தாண்டிய இந்தியா இழுவை மடி படகுகள் மூலம் இருக்கின்ற கடல் வளங்களை அழித்துச் செல்லுகின்றனர் எனவும் தமக்கு தொழில் செய்வதற்கு மண்ணெண்ணெய் இல்லாத நிலையில் கடலட்டை தொழிலாளர்கள் தென்பகுதியிலிருந்து வருகை தந்து அதிகளவில் கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் அது எவ்வாறு சாத்தியம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை இந்திய தமிழ்நாடு பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை கடல் எல்லைகள் தெரியாமல்
பேசுவதாகவும், கச்சதீவு எங்கு உள்ளது முல்லைத்தீவு எங்கு உள்ளது,
சுண்டிக்குளம் எங்கே உள்ளது என்றும் கேள்வி ஏழுப்பினார்.
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri