இலங்கை நடிகைகள் பெரும் சிக்கலில்
கெஹெல்பத்தர பத்மேவிடம் பல வழக்குகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு தற்போது விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.
மேலும் அவருடன் தொடர்புடைய ஐந்து நடிகைகளிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்குச் சென்றபோது பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் ஐந்து நடிகைகள் குற்றப் புலனாய்வுத் துறைக்கு வரவழைக்கப்பட்டு அவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாக விசாரணை அதிகாரிகள், நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல், பணமோசடி
இந்த நடிகைகள் கெஹெல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்தார்களா என்பதையும், சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல், பணமோசடி அல்லது ஆயுதங்கள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டார்களா என்பதையும் கண்டறிய மேலும் விசாரணைகள் நடத்தப்படும் என்று அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்த விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அடுத்த மாதம் ஏழாம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றத்திற்கு அறிவுறுத்திய நீதிபதி, சம்பந்தப்பட்ட வழக்கை அந்த திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |