ஐரோப்பிய நாடுகளில் வேலை விசாவிற்கு காத்திருக்கும் இலங்கையர்களுக்கு நெருக்கடி
கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் (Eastern Europe) வேலை வாய்ப்புக்கான விசாவிற்கு விண்ணப்பிப்பதில் இலங்கையர்களுக்கு நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நாடுகளின் தூதரகங்கள் இலங்கையில் இல்லாமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அந்த நாடுகளில் வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்ள முடியவில்லை என உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சங்கம் தெரிவித்துள்ளது.
வேலை வாய்ப்புகள்
கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிகளவான வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன.
எனினும் இலங்கைத் தொழிலாளர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்குவதில் சிக்கல்கள் எழுந்துள்ளதென சங்கத்தின் செயலாளர் முகம்மட் பாரூக் முஹம்மட் அர்ஷாத் தெரிவித்துள்ளார்.