பன்முகத்தன்மை ஆழ்கடல்களைப் பாதுகாப்பதற்கான ஐ.நா உடன்படிக்கையை வரவேற்றுள்ள இலங்கை
தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பகுதிகளின் உயிரியல் பன்முகத்தன்மை ஆழ்கடல்களைப் பாதுகாப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஐ.நா உடன்படிக்கையை இலங்கை வரவேற்றுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் நேற்று (09.03.2023) வெளிநாட்டு அலுவல்கள் ஊடக வெளியீடு ஒன்றை வெளியிட்டுள்ளது.
முக்கிய ஒப்பந்தம்
கடலின் நிலையான பயன்பாடு, அதன் நிர்வாகம் மற்றும் பல்லுயிரியலை மனிதகுலத்தின் பொதுவான பாரம்பரியமாகப் பாதுகாப்பது தொடர்பான சர்வதேச சட்ட ஆட்சியை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்தமை பற்றி தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.