இந்தியாவின் அஸ்ட்ரா செனேகா தடுப்பூசிக்காக காத்திருக்கும் இலங்கை
இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் இருந்து மேலும் ஒரு தொகை அஸ்ட்ரா செனேகா தடுப்பூசிக்காக இலங்கை தொடர்ந்தும் காத்திருக்கின்றது.
இந்த நிலையில் முதல் தடுப்பூசி வழங்கப்பட்டதில் இருந்து இரண்டாவது தடுப்பூசியை 16 வாரங்களுக்கு பின்னர் வழங்குவது குறித்து சுகாதார அமைச்சு பரிசீலித்து வருகிறது.
இந்த விடயம், இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தலைமையில் நேற்று நடைபெற்ற கோவிட் வைரஸ் பணிக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் தடுப்பூசி முதல் செலுத்தலின் பின்னர் 12 வாரங்களுக்கு பதிலாக 16 வாரங்களுக்குப் பிறகு தடுப்பூசி சிறப்பாக நிர்வகிக்கப்படுகின்றது என்று சமீபத்திய அறிவியல் ஆராய்ச்சி கண்டறிந்தது.
இந்தநிலையில், சுகாதார அமைச்சகம் இந்த விஷயத்தை ஆய்வு செய்து இறுதி முடிவை எடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியாவிலிருந்து அஸ்ட்ரா செனெகா தடுப்பூசியின் அதிக அளவுகளுக்கு இலங்கை தொடர்ந்து காத்திருப்பதால்இ இரண்டாவது தடுப்பூசியை செலுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது.
சீரம் நிறுவனம் அஸ்ட்ராசெனெகாவின் ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி இலங்கையில் கடந்த ஜனவரி முதல் இதுவரை 900, 000 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும்இ சீரம் நிறுவனம் தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்தியுள்ளதால், முதல் தடுப்பூசியைப் பெற்ற அனைவருக்கும் இலங்கை இரண்டாவது தடுப்பூசியை வழங்க முடியாது என்ற கவலை ஏற்பட்டுள்ளது.
2021 ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டாவது அளவை வழங்க அரசாங்கம் நம்பியிருந்தது.
எனினும் சீரம் நிறுவனத்தின் தாமத அறிவிப்பால் கோவிட் தடுப்பூசிகள் உரிய காலத்தில் கிடைக்கவில்லை.