சாரதிகளுக்கு ஏற்படப்போகும் சிக்கல்: அறிமுகமாகும் விசேட செயலி
சாரதிகளின் தவறுகளைத் தெரிவிப்பதற்கு விசேட செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
அதன் ஊடாக சாரதிகள் செய்யும் தவறுகளை பயணிகள் நேரடியாக முன்வைக்க முடியும் என விபத்து விசாரணை முகாமையாளர் எரந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், சாரதிகள் செய்யும் தவறுகளை ஆவணப்படுத்துவதற்கும் சாரதிகளுக்குப் பிழை சரிபார்ப்பு புத்தகத்தை அறிமுகப்படுத்துவதற்கும் இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.

சாரதிகளின் தவறுகள்
இதன் மூலம் சாரதிகளின் தவறுகளை போக்குவரத்து பொலிஸார் சுட்டிக்காட்ட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த வருடத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான சுமார் 218 பேருந்து விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளதாக விசாரணை முகாமையாளர் எரந்த பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
ஜனனி சொன்ன ஒரே ஒரு விஷயம், ஷாக்கான ஈஸ்வரி, கதிர் போடும் திட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam