இலங்கையை நோக்கி படையெடுக்கும் அதிகளவான இந்தியர்கள்..
ஜூலை மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 200,000ஐ கடந்துள்ளது.
இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் தரவுகளின்படி, ஜூலை மாதத்தில் 200,244 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இது 6.6% அதிகமாகும்.
இந்தியப் பயணிகளின் அதிகரிப்பு
இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, ஜூலை மாதத்தில் இந்தியாவிலிருந்து 37,128 சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர்.
மேலும், ஜூலை மாதத்தில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 23,475 பேர், நெதர்லாந்திலிருந்து 15,556 பேர், சீனாவிலிருந்து 12,982 பேர் மற்றும் பிரான்சிலிருந்து 11,059 பேர் இலங்கைக்கு வந்துள்ளனர்.
இதன்படி, ஜனவரி 01 முதல் ஜூலை 31, 2025 வரையிலான சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,368,288 ஆகும்.
இவர்களில் 279,122 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தும், 131,377 பேர் ரஷ்யாவிலிருந்தும், 115,470 பேர் ஐக்கிய இராச்சியத்திலிருந்தும் வந்ததாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 6ஆம் நாள் மாலை திருவிழா



