யுத்த மைதானமாக மாறப்போகும் இலங்கை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை! செய்திகளின் தொகுப்பு
அமெரிக்கா, இந்தியா, மற்றும் சீனா ஆகிய நாடுகளின் யுத்த மைதானமாக இலங்கை எதிர்காலத்தில் மையப்படுத்தப்படும் என ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச (Vijayadasa Rajapaksa)தெரிவித்துள்ளார்.
சீனாவிற்குப் பிரதான வளங்களை வழங்கியதன் பிரதிபலனாக கெரவலபிடிய மின்நிலையத்தை அமெரிக்காவிற்கு வழங்க வேண்டியுள்ளது.சீனாவின் பொறிக்குள் இருந்து நீங்கும் வரை இலங்கைக்கு இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் அழுத்தங்களிலிருந்து விடுபடமுடியாது என குறிப்பிட்டுள்ளார்.
எப்போது வெளிநாட்டுக் கடன் என்ற எரிமலை வெடிக்கும் என்று ஊகிக்க முடியாத அளவிற்குக் கடன் சுமையில் நாடு உள்ளது. சீனாவுடன் நெருங்கியவர் ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து நாடு அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை இணைத்து வருகிறது இன்றைய தமிழ்வின் செய்திகளின் தொகுப்பு,