வடக்கு கிழக்கு தழுவிய நிர்வாக முடக்கல் போராட்டம்! யாழ். வலய சட்டத்தரணிகளின் முக்கிய அறிவிப்பு
யாழ்ப்பாண வலய சட்டத்தரணிகள் வடக்கு கிழக்கில் நாளைய தினம் இடம்பெறவுள்ள நிர்வாக முடக்கலுக்கு பூரண ஆதரவு தெரிவித்து யாழ். வலய நீதிமன்றங்களில் முன்னிலையாகமாட்டார்கள் என அகில இலங்கை சட்டத்தரணிகள் சங்க யாழ்ப்பாண வலய தலைவரும் யாழ்ப்பாண நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கதலைவருமான பாலசுப்பிரமணியம் தவபாலன் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கில் சிவில் அமைப்புக்கள் தமிழ் கட்சிகள் என பலதரப்பினர் இணைந்து பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து நாளைய தினம் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
எனவே நிர்வாக முடக்கலுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் யாழ். வலயத்திற்குட்பட்ட ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம், பருத்தித்துறை, சாவகச்சேரி, மல்லாகம் ஆகிய ஐந்து நீதிமன்றங்களிலும் சட்டத்தரணிகள் முன்னிலையாகாது பூரண ஆதரவினை வழங்கவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.




