கனடாவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்
கனடாவில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்த இலங்கைத் தமிழர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒன்டாரியோவின் Whitchurch-Stouffville பகுதியை சேர்ந்த 31 வயதான கபிலரசு கருணாநிதி என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
Pickering பகுதியில் போலி இலங்கை கடவுச்சீட்டு மூலம் வங்கிக் கணக்கு ஒன்றை ஆரம்பிக்க முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இலங்கை கடவுச்சீட்டு
இலங்கை கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கணக்கொன்றை ஆரம்பிக்க முயற்சித்ததாகவும், அது மோசடியானது என கண்டுபிடிக்கப்பட்டதாகவும் டர்ஹாம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்த பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகைத்தந்துள்ளனர்.
போலி ஆவணம்
போலியான இலங்கை கடவுச்சீட்டு, முற்றிலும் போலியான ஆவணம், வருமானம் பெறுவதற்கான மோசடி ஆவணங்கள் போன்றவற்றை அவர் வைத்திருந்தார் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கபிலரசு கருணாநிதி மீது இரண்டு போலி ஆவணம் வைத்திருந்தமை மற்றும் 5,000 டொலருக்கு கீழ் இரண்டு மோசடி முயற்சிகள் உட்பட பல குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.
எனினும் நீதிமன்றில் அவருக்கு எதிரான குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை. அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.





ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
