இலங்கை சமூக பாதுகாப்பு சபைக்கு அதிக ஆட்கள் சேர்த்தமைக்கு கௌரவிப்பு நிகழ்வு
மகளிர், சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை சமூகப் பாதுகாப்பு சபைக்கு மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலிருந்து அதிகளவான அங்கத்தவர்களை இணைத்துக் கொண்டமைக்கு கௌரவிப்பு நிகழ்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது, தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்டவர்கள், பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாறக்கின் தலைமையில் கௌரவிக்கப்பட்டனர்.
கலந்து கொண்டோர்
இந்நிகழ்வில் நிருவாக கிராம உத்தியோகத்தர் கே.எம்.எம். ஜறூஸ், தலைமை சமுர்த்தி முகாமையாளர் வீ. கோடிஸ்வரி, சமுர்த்தி உத்தியோகத்தர்களான எஸ்.எம்.ஏ. ஆப்தீன், கே. எம். பஷீருக்கும் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மேலும், உதவி பிதேச செயலாளர், நிருவாக உத்தியோகத்தர், நிருவாக கிராம உத்தியோகத்தர், தலைமை சமுர்த்தி முகாமையாளர், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளார்கள்.