90 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இலங்கை
வீதி மேம்பாட்டிற்காக, இலங்கை மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன 90 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இரண்டாவது ஒருங்கிணைந்த வீதி முதலீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த இரண்டு தரப்புக்களும் கைச்சாத்திட்டுள்ளன.
வானிலைக்கு ஏற்ற தரநிலை
நிதி அமைச்சகத்தின் அறிக்கையின்படி, ஆசிய அபிவிருத்தி வங்கியுடனான பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் வெற்றிகரமாக முடித்த பின்னர், இந்த கடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமப்புற சமூகங்கள் மற்றும் முக்கிய சமூக-பொருளாதார மையங்களுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்துவதம், வலுப்படுத்துவதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
அத்துடன் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அணுகக்கூடிய சுமார் 500 கிலோமீட்டர் கிராமப்புற வீதிகளை மேம்படுத்துவதற்கு இந்த கடன் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவை காலநிலை மற்றும் வானிலைக்கு ஏற்ற தரநிலைகளுக்கு ஏற்ப உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan