அதிகாரபூர்வ கடன் குழுவுடன் கைச்சாத்திடவுள்ள இலங்கை
நாட்டின் கடன்களை மறுசீரமைப்பதற்காக பாரிஸ் கிளப் ஒஃப் நேசன்ஸ் (Paris Club of Nations) மற்றும் சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி ஆகியவற்றின் அதிகாரபூர்வ கடன் குழுவுடன் இலங்கை அரசாங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது.
அடுத்த மாதம் மேற்கொள்ளப்படவுள்ள, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் குழுவின் மதிப்பாய்வுக்கு முன்னர் இந்த உடன்பாடு கைச்சாத்திட்ப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கைக்கான மதிப்பாய்வு
மறுபரிசீலனைக்கு முன்னர் இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் என்பதில் அரசாங்கம் மிகவும் சாதகமான நிலையிலுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இலங்கைக்கான மதிப்பாய்வு சர்வதேச நாணய நிதியத்தின் குழுவால் அங்கீகரிக்கப்பட்டதும் நாட்டிற்கு 337 மில்லியன் டொலர்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும், தனியார் பத்திரம் வைத்திருப்பவர்கள் மற்றும் சீன அபிவிருத்தி வங்கியின் வணிகக் கடன்கள் சம்பந்தப்பட்ட கடன்கள் எப்போது முடிவடையும் என்பது இன்னும் நிச்சயமற்ற நிலையிலேயே உள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
