சிங்கப்பூரிடம் கடன் கேட்கும் இலங்கை!
சிங்கப்பூரிடம் இருந்து பிரிட்ஜ் லோன் என்ற இடைக்கால நிதியுதவி மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அதிகரிப்பதற்கு இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.
சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனின் அழைப்பின் பேரில்,சிங்கப்பூருக்கு சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
சிங்கப்பூர் அமைச்சர்களுடனான கலந்துரையாடல் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை மையமாகக் கொண்டதாக அமைந்திருந்தது.
இடைக்கால நிதியுதவியைப் பெறுவது, வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அதிகரிப்பது மற்றும் சிங்கப்பூருக்கான இலங்கை ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான உதவிகளை இதன்போது அமைச்சர் பீரிஸ் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் கோரியதாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

ஆயுத ஏற்றுமதியில் சாதனை படைத்த நாடு - ஜேர்மனி, இந்தியா உட்பட பல நாடுகள் முக்கிய வாடிக்கையாளர்கள் News Lankasri

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri
