முதலில் வருவோருக்கு முன்னுரிமை! இன்று முதல் இலங்கை மக்களுக்கு கிடைக்கவுள்ள சந்தர்ப்பம்
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட சுற்றோட்டம் செய்யப்படாத மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான ஞாபகார்த்த நாணய குற்றிகளை மத்திய வங்கியின் விற்பனை நிலையங்கள் ஊடாக இன்று (09.03.2023) முதல் விற்பனை செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மக்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு
அந்த நாணயக் குற்றிகளில் ஒன்றை மத்திய வங்கியின் விற்பனை நிலையங்கள் ஊடாக 6,000 ரூபாவிற்கு கொள்வனவு செய்யும் வாய்ப்பு மக்களுக்கு வழங்கப்படுவதாக மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் நாணயக் குற்றிகள் விற்பனை செய்யப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.