இலங்கைக்கு சட்டவிரோதமாக அனுப்பிவைக்கப்பட்ட பெருந்தொகை பொருட்கள்! 22 கோடி ரூபாய் வருவாயை இழந்த அரசாங்கம்
துபாயில் இருந்து கொழும்பு துறைமுகத்துக்கு சட்டவிரோதமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள கொள்கலனில், 35 கோடி ரூபாய் பெறுமதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
துபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 35 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான மூன்று சொகுசு வாகனங்கள் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றியதாக சுங்க திணைக்களம் நேற்று (06.06.2023) தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட பொருட்கள்
டொயோட்டா ப்ரியஸ் கார் ஒன்றும், 4 கோடி ரூபாய் மதிப்பிலான 2 டொயோட்டா அலியன் கார்களும், 18 கோடி ரூபாய் மதிப்பிலான ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட வாசனை திரவியங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள், வெளிநாட்டு மதுபானம், ஆலிவ் ஆயில் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கியுள்ளதாகவும் சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
இலங்கை சுங்க வருவாய் கண்காணிப்பு பிரிவின் நடமாடும் களஞ்சியசாலையில் வைத்து பரிசோதிக்கப்பட்ட வாகன உதிரிபாகங்கள் என சுங்க அதிகாரிகளிடம் தெரிவித்து கொழும்பு கோட்டை சத்தம் தெருவில் உள்ள ஒரு நிறுவன முகவரிக்கு சரக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
இந்த சரக்குகளுக்கு சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்தால், அரசுக்கு 22 கோடி ரூபாய் பாரிய வருவாய் கிடைத்திருக்கும் என சுங்கத்துறை மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |