இலங்கை அகதிகள் தொடர்பில் தமிழக பொலிஸாருக்கு வந்த அநாமதேய தொலைபேசி அழைப்பு

Sri Lanka Refugees Sri Lanka Economic Crisis Sri Lanka India
By Erimalai Sep 08, 2022 12:17 PM GMT
Report

இலங்கை தமிழர்கள் சுமார் 15 பேர் கடல் வழியாக தனுஷ்கோடி வந்து இறங்கி தனுஷ்கோடி புதிய பாலம் அருகே நிற்பதாக ராமநாதபுரம் மாவட்ட பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம தொலைபேசி அழைப்பொன்று வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் தனுஷ்கோடி கடற்கரை பகுதி தயார்ப்படுத்தப்பட்டு மத்திய, மாநில உளவுத்துறை மற்றும் பொலிஸார் தனுஷ்கோடி பகுதியில் தீவிர சோதனைகளை நடத்தியுள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து மக்கள் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள் அகதிகளாக செல்கின்றனர்.

அவ்வாறு செல்பவர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழகம் செல்லும் இலங்கை அகதிகள் 

இவ்வாறு சட்டவிரோதமாக தமிழகத்திற்கு வரும் இலங்கை தமிழர்களை கண்காணிக்கவும், அவர்களை அழைத்து வரும் படகோடிக்களை சுற்றி வளைத்து கைது செய்யவும், மத்திய, மாநில உளவுத்துறை, இந்திய கடற்படை, கடலோர காவல் படை மற்றும் மரைன் பொலிஸார் தயார்ப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மர்ம தொலைபேசி அழைப்பு 

இலங்கை அகதிகள் தொடர்பில் தமிழக பொலிஸாருக்கு வந்த அநாமதேய தொலைபேசி அழைப்பு | Sri Lanka Refugees India

இந்நிலையில் நேற்று (7) இரவு சுமார் 11 மணியளவில் இராமநாதபுரம் மாவட்ட பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் பேசிய மர்ம நபர், “தனுஷ்கோடி கடல் பகுதியில் 15க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வந்திருப்பதாகவும், அவர்களை அழைத்து வந்த படகோடிகள் அரிச்சல்முனை பகுதியில் இருப்பதாகவும் உடனடியாக வந்தால் அவர்களை கைது செய்து இலங்கை தமிழர்களை மீட்டு செல்லாம்” என தெரிவித்துள்ளார்.

மேலும் அதே மர்ம நபர் மரைன் பொலிஸாரையும் தொலைபேசியில் அழைத்து இதே போல் கூறியுள்ளார்.

தீவிர தேடுதல் நடவடிக்கையில் தமிழக பொலிஸார் 

இலங்கை அகதிகள் தொடர்பில் தமிழக பொலிஸாருக்கு வந்த அநாமதேய தொலைபேசி அழைப்பு | Sri Lanka Refugees India

இதையடுத்து தனுஷ்கோடி கடற்கரை பகுதி தயார்ப்படுத்தப்பட்டு, உடனடியாக மத்திய, மாநில உளவுத்துறை, மரைன் பொலிஸ் மற்றும் தனுஷ்கோடி பொலிஸ் நிலைய பொலிஸார் சுமார் 20க்கும் மேற்பட்டோர் ஜீப், வான் உள்ளிட்ட வாகனங்களில், தனுஷ்கோடி அரிச்சல்முனை, தனுஷ்கோடி புதிய பாலம், கோதண்டராமர் கோயில், சேராங்கோட்டை உள்ளிட்ட கடற்கரைப் பகுதியில் இரவு முழுவதும் இலங்கை தமிழர்கள் மற்றும் படகோடிகளை தேடியுள்ளனர்.

ஆனால் அந்த தொலைபேசி அழைப்பில் குறிப்பிட்டவாறு இலங்கை தமிழர்கள் யாரும் அகதிகளாக தனுஷ்கோடி வரவில்லை என உறுதி செய்யப்பட்டது.

இலங்கை அகதிகள் தொடர்பில் தமிழக பொலிஸாருக்கு வந்த அநாமதேய தொலைபேசி அழைப்பு | Sri Lanka Refugees India

பின்னர் அந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்ட போது தொலைபேசி அணைத்து வைக்கப்பட்டது.

இதனால் சந்தேகமடைந்த பொலிஸார் தொலைபேசியில் அழைத்தது யார் என்பது குறித்து தொலைபேசி எண்ணை கொண்டு பொலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.    

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
நன்றி நவிலல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US