காலி முகத்திடல் போராட்டம் குறித்து எட்டு முறை கோட்டாபயவிற்கு சென்ற செய்தி! ஏற்பட்ட பாரதூரமான விளைவு
நாட்டில் பாரிய நெருக்கடிகள் தோற்றம் பெற்றதற்கு பொதுஜன பெரமுனவின் அரச தலைவர்களான கோட்டாய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட முழு அமைச்சரவையும் பொறுப்புக்கூற வேண்டும் என ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் அதிகாரத்தில் இருந்த பழமையான கட்சிகளை பலவீனப்படுத்தும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெற்றது.
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலிலும், 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலிலும் பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெற்று மக்களாணையை உறுதிப்படுத்தியது.
ரணிலின் வருகையோடு வழமைக்குத் திரும்பிய நாடு
விருப்பு தேர்தல் முறைமை ஊடாக எந்த அரசியல் கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன குறிப்பிட்ட கருத்தை முழுமையாக தோற்கடிக்கும் வகையில் பொதுஜன பெரமுன பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றது. பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் மக்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையில் அரசாங்கத்தை தோற்றுவித்தார்கள்.
குறுகிய காலத்துக்குள் பொதுஜன பெரமுன அரசாங்கம் மக்களால் வெறுக்கப்பட்டு அதளபாதாளத்துக்கு சென்று முழுமையாக இல்லாதொழிந்தது. இதற்கு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி, பிரதமர் உட்பட அமைச்சரவை முழுமையாக பொறுப்புக்கூற வேண்டும்.
காலி முகத்திடல் போராட்ட களத்துக்கு இடமளிக்க வேண்டாம். ஜனநாயக போராட்டம் என்ற போர்வையில் தோற்றம் பெற்றுள்ள போராட்டம் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் எட்டு முறை குறிப்பிட்டேன்.
அப்போதைய அமைச்சரவையில் இருந்தவர்களில் ஒருசிலர், 'காலி முகத்திடல் போராட்டம் ஜனநாயகமானது, ஆகவே போராட்டத்துக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம்' என குறிப்பிட்டார்கள். அவர்கள் தற்போதைய அமைச்சரவையிலும் அங்கம் வகிக்கிறார்கள். காலி முகத்திடல் ஜனநாயக போராட்டம் இறுதியில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியது.
அரசியல் நெருக்கடி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தது. ஜனாதிபதியின் தீர்மானங்களினால் நாடு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதையிட்டு மகிழ்ச்சியடைய வேண்டும்.
நாடு என்ற ரீதியில் எதிர்கொண்ட பாரிய நெருக்கடி, தற்போதைய நிலைமை ஆகியவற்றை ஒரு படிப்பினையாக கொண்டு சகல அரசியல் கட்சிகளும் எதிர்வரும் காலங்களில் சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும்.
அரசியல் நோக்கத்தை முன்னிலைப்படுத்திக்கொண்டு கட்சி அடிப்படையில் பிளவுபட்டால் நாட்டு மக்கள் அரசியலை முழுமையாக புறக்கணிப்பார்கள் என குறிப்பிட்டார்.
You My Like This Video

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
