“போராட்டக்காரர்களே அடங்குங்கள்! இல்லையேல் அடக்குவோம்”-செய்திகளின் தொகுப்பு
அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் தாமாகவே அடங்க வேண்டும். இல்லையேல் அவர்களை அரசு அடக்கியே தீரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாங்கள் அமைதியாகவே ஒதுங்கி நின்றோம். தொடர்ந்து அமைதி காக்க நாங்கள் தயார் இல்லை. எம்மைச் சீண்டுவோருக்குத் தக்க பதிலடி கொடுக்க நாங்கள் தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அரசுக்கு எதிராகப் போராடுவோர் உண்மையான போராட்டக்காரர்கள் அல்லர். அவர்கள் கொடிய வன்முறையாளர்கள்.
அவர்கள் கடந்த மே 9 ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உறுப்பினர்களின் வீடுகளை எரித்து தங்கள் காடைத்தனத்தை நிரூபித்துக் காட்டியுள்ளார்கள் எனவும் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மாலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,
ஜெயிலர் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா.. விஜய்யை தொடர்ந்து ரஜினி செய்யப்போகும் பிரம்மாண்ட விஷயம் Cineulagam
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri