ராஜபக்சர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை-செய்திகளின் தொகுப்பு
2005 ஆம் ஆண்டு தானும் இணைந்து மகிந்த ராஜபக்சவை நாட்டின் ஜனாதிபதி பதவிக்கு கொண்டு வந்ததாகவும் எனினும் அவரது குடும்ப உறுப்பினர்கள் நாட்டின் நிர்வாகத்தில் தலையிட்டு நாட்டை அழிவை நோக்கி கொண்டு சென்றனர் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 5 மாவட்டங்களில் தேர்தல் பிரசாரங்களை நான் பொறுப்பேற்று மகிந்தவை ஜனாதிபதியாக பதவிக்கு கொண்டு வந்தோம்.
சிறிது காலம் சென்றதும் அவரது பிள்ளைகளின் கைகள் ஓங்கின. மாமா என்றனர்.அங்கிள் என்றனர். பின்னர் மச்சான் என்றனர். இறுதியில் அவர்கள் இரவில் போடும் ஆட்டங்கள் பற்றி எமக்கு எதிரில் பேச ஆரம்பித்தனர். அடுத்தது பாரியார். பிள்ளைகள் ஒரு பக்கம். இரண்டு தம்பிமார் அமெரிக்காவில் இருந்து வந்தனர்.
இவர்களில் ஒருவர் மிஸ்டர் 10 வீதம். இலஞ்சம் என்பதை உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு சட்டமாக மாற்றிய பசில் இலங்கைக்கு வந்தார். அவருக்கு ஏழு மூளைகள் இருப்பதாக கூறினர்.
ஆனால் எமது நாட்டின் மீது ஏழு இடிகள் விழுந்தன. சீக்கிரமாக செல்லுமாறு கூறி அவரை விமானத்தில் ஏற்றி அனுப்பி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். தற்போது சென்று விட்டார் மகிழ்ச்சி. மீண்டும் இந்த பக்கம் வர வேண்டாம் எனவும் விஜித் விஜயமுனி சொய்சா கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri
ஜேர்மனியை பிரித்தானியா முதலான நாடுகளுடன் இணைக்கும் புதிய எரிவாயுக்குழாய் திட்டம் துவக்கம் News Lankasri
சூப்பர் சிங்கர் 11 புகழ் சரண் ராஜாவா இது, ஹேர் ஸ்டைல் மாற்றி ஆளே மாறிவிட்டாரே.... செம லுக் பாருங்க Cineulagam
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri