சாரதிகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள eTraffic App.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கை பொலிஸ் திணைக்களம் Sri Lanka Police eTraffic App ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுவரை பொதுமக்களில் 13000 பேர் இந்த Sri Lanka Police eTraffic Appயை தரவிறக்கம் செய்துள்ளதாக இலங்கை பொலிஸ் பேச்சாளர் எப்.யு. வுட்லர் (F.U. Wootler) தெரிவித்துள்ளார்.
இலங்கை பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற போக்குவரத்து தொடர்பான ஊடக மாநாட்டில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதிக வேகம்..
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், இலங்கையில் அண்மைக்காலமாக வீதி விபத்துக்களில் அதிகளவான பொது மக்கள் மரணிப்பது அதிகரித்துள்ளது.

பொதுவாக கொழும்புக்கு வெளியில் இடம்பெறும் விபத்துக்களில் மரணிப்போரின் வீதம் அதிகரித்துள்ளது. இதற்கு அதிக வேகம் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறுவதால் ஏற்படுகிறது.
ஆகையால் அனைவரும் குறித்த Appயை தரவிறக்கம் செய்து நீங்கள் வீதியில் நடந்து செல்லும் போது அல்லது வாகனத்தில், பொது போக்குவரத்தில் பயணிக்கும் போது அதிக வேகமாக அல்லது போக்குவரத்து விதிகளை மீறி செல்லும் வாகனங்களின் அல்லது சாரதிகளின் காணொளி, புகைப்படம் ஒன்றை எடுத்து இந்த Appயில் தரவேற்றம் செய்தால் பொலிஸ் அவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்றார்.
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 19 மணி நேரம் முன்
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்காவிட்டால்.,ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப் News Lankasri
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam