தமிழர் பகுதியில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை! பொலிஸாரின் அதிரடி நடவடிக்கைகள்
நாட்டில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் நாளுக்கு நாள் பொலிஸாரின் சுற்றி வளைப்புக்களும் கைது நடவடிக்கைகளும் தொடர்ந்து இடம்பெற்ற வகையிலே உள்ளது.
கிளிநொச்சி
கிளிநொச்சி- பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் வைத்து 29கிலோ, 150 கிராம் கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழில் இருந்து கிளிநொச்சி நோக்கி கப்ரக வாகனத்தில் கஞ்சா ஏற்றி வருவதாக பளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் வைத்து சந்தேகநபர்கள் இருவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சூட்சமமான முறையில் கப்ரக வாகனத்தில் கஞ்சா ஒழித்து மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குலரத்ன தலைமையில் இச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
செய்தி:யது
யாழ்ப்பாணம்
அச்சுவேலி - பொக்கணையில் 180 லீட்டர் கோடா மற்றும் 40 சட்டவிரோத மதுபானத்துடன் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இக் கைது நடவடிக்கை இன்றையதினம் (26) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றிவளைப்பில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
180 லீட்டர் கோடா மற்றும் 30 லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் காட்டுப் பகுதியில் மறைத்து வைத்திருந்த நிலையிலே பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் அதே பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவர் 10 லீட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களுடன் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி: கஜிந்திரன்
யாழ்ப்பாணம்
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் இருவர் நேற்றையதினம் (25) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மானிப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மானிப்பாய் பொலிஸாரால் இக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 32 வயதுடைய இருவர் தலா 40 மில்லிக்கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் மேலதிக விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செய்தி:கஜிந்திரன்
மட்டக்களப்பு
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்பட பல இடங்களில் சட்டவிரோத மதுபானம், மற்றும் கோடா உற்பத்தியில் ஈடுபட்ட பெண் ஒருவர் உட்பட 6 சந்தேகநபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்போது பெருமளவு சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடா போன்றவற்றையும், அதன் உற்பத்திற்கு உபயோகிக்கப்பட்ட பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மட்டக்களப்பு- காஞ்சிரங்குடா பகுதியிலிருந்து பழுகாமம் பகுதிக்கு வரலிகளில் 2 மோட்டார் சைக்கிளில் சட்டவிரோத மதுபானம் எடுத்து வந்த நிலையில் அதனை கையும் மெய்யும்மாக பொலிஸார் மிகவும் சூட்சுமமான முறையில் பறிமுதல் செய்து, சந்தேக நபர்களையும், கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் மகிழூர், மற்றும் மகிழூர்முனை ஆகிய பகுதிகளிலும், சட்டவிரோத மதுபான உற்பத்தி செய்து வந்த நிலையங்கள் முற்றுகையிடப்பட்டு அதனை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனையின் பெயரில், களுவாஞ்சிகுடி பிரதே உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி அபேயவிக்கிரமவின் தலைமைத்துவத்தின் கீழான பொலிஸ் குழு இந்நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
செய்தி: ருசாத்