அரசியல் கைதிகள் 8 பேர் விடுதலை(Video)
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 பேர் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கும் நன்றி தெரிவித்தது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நன்றியை தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று (18) புதன்கிழமை நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ச முன்வைத்த சட்டமூலங்கள் மீதான விவாதத்தின் போதே இவ்வாறு கூறினார்.
பயங்கரவாத தடைச் சட்டம்
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 பேர் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை விடுதலை செய்தமைக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கும் நாம் நன்றி தெரிவிகின்றோம்.
மேலும் இவர்கள் 8 பேரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்டவர்களாவர். இவர்களில் 5 வருடம் முதல் 200 வருடங்கள் வரை சிறைத்தண்டனைகளுக்கு உட்பட்டவர்களும் அடங்குகின்றனர்.
தன்னிச்சையான செயற்பாடு
இதேவேளை பல வல்லரசு நாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் தேவையாக உள்ளது. இதனால் ஒருசில வல்லரசு நாடுகளை மீறி இலங்கையை பாதுகாப்பு கவுன்சிலிற்கு கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை ஒன்று தற்போது உள்ளது ஆனால் எதிர்காலத்தில் அது மாறலாம்.
ஆகவே இந்த பலத்தை வைத்துக்கொண்டு இலங்கை அரசாங்கம் உண்மைகளை மறைத்து,தன்னிச்சையான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம்.”என கூறியுள்ளார்.
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)