நெருக்கடியிலிருந்து இலங்கை விரைவில் மீண்டெழும் – சீனா நம்பிக்கை
பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து இலங்கை விரைவில் மீண்டெழும் என சீனா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீனாவின் துணை வெளிவிவகார அமைச்சர் சன் வெய்டோங் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டும் சுபீட்சமான பாதையில் இலங்கை பயணிக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
[K27VB6``]
சீனா தொடர்ச்சியாக உதவிகளை வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதற்கு பௌத்த மதம் ஓர் பிரதான ஏதுவாக அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கண்டி மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே சித்தார்த்த சுமங்கல தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.