அரச சேவை தொடர்பில் கண்காணிக்க விசேட புலனாய்வுக் கட்டமைப்பு
அரசாங்கப் பணியாளர்கள் மற்றும் அரச சேவைகள் தொடர்பில் கண்காணிப்பதற்காக விசேட புலனாய்வுக்கட்டமைப்பொன்று உருவாக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரசாங்கப் பணியாளர்கள் மற்றும் அரச சேவைகள் தொடர்பில் நாளாந்தம் ஜனாதிபதி அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்துக்கு ஏராளம் முறைப்பாடுகள் கிடைத்த வண்ணம் உள்ளன.
புலனாய்வு ரீதியான கட்டமைப்பு
அவ்வாறு கிடைக்கப் பெறும் முறைப்பாடுகள் தொடர்பில் எதிர்வரும் காலங்களில் விசாரணை நடத்த புலனாய்வு ரீதியான கட்டமைப்பொன்று நிறுவப்படவுள்ளது.

ஒவ்வொரு அமைச்சுகளின் கீழும் முதலாம் தர உத்தியோகத்தர் ஒருவர் அதற்கென நியமனம் செய்யப்படவுள்ளார்.
அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கையைப் பாதுகாப்பதற்கும், அரச சேவையின் வினைத்திறனை அதிகரிப்பதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam