வெளியுறவுக் கொள்கை குறித்து விளக்கமளித்த இலங்கையின் புதிய அரசாங்கம்

Colombo Anura Kumara Dissanayaka Vijitha Herath Sri Lanka Government
By Sivaa Mayuri Oct 15, 2024 03:10 AM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in அரசியல்
Report
Courtesy: Sivaa Mayuri

இலங்கையின் புதிய அரசாங்கம், கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திரிகளுக்கு அதன் வெளியுறவுக் கொள்கை குறித்து விளக்கமளித்துள்ளது.

வெளிநாடுகளின் உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள், இராஜதந்திர சமூக உறுப்பினர்கள், ஐக்கிய நாடுகளின் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மற்றும் கொழும்பில் உள்ள சர்வதேச அமைப்புகளின் தலைவர்களுக்கு இந்த விளக்கத்தை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நேற்று (14) வழங்கியுள்ளார்.

கொழும்பு நோக்கி சென்ற விரைவு தொடருந்தில் தீ விபத்து

கொழும்பு நோக்கி சென்ற விரைவு தொடருந்தில் தீ விபத்து

கடன் மறுசீரமைப்பு செயல்முறை

நவம்பரில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த பின்னரே, புதிய அரசாங்கம் முன்னோக்கிச் செயற்படுவதில் முழுமையாக கவனம் செலுத்த முடியும் என்று அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

வெளியுறவுக் கொள்கை குறித்து விளக்கமளித்த இலங்கையின் புதிய அரசாங்கம் | Sri Lanka New Government Briefed On Foreign Policy

அத்துடன் தேர்தலின் பின்னரே, அரசாங்கம் இருதரப்பு தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் முடிவடைந்த ஜனாதிபதித் தேர்தலில், இலங்கை மக்கள் ஒரு புதிய நெறிமுறை அரசியல் கலாசாரத்தில் மாற்றத்திற்கான ஆணையை வழங்கியுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

இலங்கை நாட்டின் கடன் மறுசீரமைப்பு செயல்முறை முடிவடையும் தருவாயில் உள்ளது இது, சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வை நோக்கி அரசாங்கம் செல்வதற்கு உதவியுள்ளதாக ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த கால பிரச்சினைகளுக்கு தீர்வு

இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழலைப் பொறுத்துக் கொள்ளக் கூடாது என்ற உறுதிமொழிகளுக்கு இணங்க, சில முக்கிய விடயங்களில் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வெளியுறவுக் கொள்கை குறித்து விளக்கமளித்த இலங்கையின் புதிய அரசாங்கம் | Sri Lanka New Government Briefed On Foreign Policy
இனம், மதம், வர்க்கம் மற்றும் பிற வேறுபாடுகளின் அடிப்படையிலான பிளவு சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து மதிப்புள்ள தேசத்தை உருவாக்குவது இந்த அரசாங்கத்தின் மற்றொரு முக்கிய நோக்கமாகும் என்று விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கடந்த கால பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது உட்பட அனைத்து குடிமக்களின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை புதிய அரசாங்கம் பாதுகாக்கும்.

இதனடிப்படையில் விசாரணைகளின்றி இருந்த முக்கிய சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பிரிக்ஸ் மற்றும் புதிய அபிவிருத்தி வங்கியின் உறுப்புரிமைக்கு விண்ணப்பிக்க இலங்கை முடிவு செய்துள்ளது.

இதற்கிடையில், இந்த மாத முற்பகுதியில் இலங்கை வந்த இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமர் நரேந்திர மோடியின் சார்பாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை, வசதியான திகதியில் இந்தியாவுக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

சுயாதீனமான உள்நாட்டுப் பொறிமுறைகள் 

2024 அக்டோபர் 9ஆம் திகதியன்று ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

வெளியுறவுக் கொள்கை குறித்து விளக்கமளித்த இலங்கையின் புதிய அரசாங்கம் | Sri Lanka New Government Briefed On Foreign Policy

அதில், மக்களின் நம்பிக்கையை ஏற்படுத்தும் நல்லிணக்கத்திற்கான நம்பகமான மற்றும் சுயாதீனமான உள்நாட்டுப் பொறிமுறைகள் மற்றும் செயல்முறைகளைக் கொண்டிருப்பதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை அரசாங்கம் முன்னிலைப்படுத்தியுள்ளது என்று ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தை இலங்கை நிராகரித்த போதிலும், பேரவையின் பொறிமுறைகளுடன் இலங்கை ஆக்கபூர்வமாக தொடர்ந்து ஈடுபடும் அதேநேரம் மனித உரிமைகள் பிரச்சினைகளில் வெளி பொறிமுறையை நிறுவும் தீர்மானத்தை இலங்கை எதிர்க்கிறது என்றும் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.   

நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

அரையிறுதிக்கு தகுதி பெற்ற நியூஸிலாந்து மகளிர் அணி

அரையிறுதிக்கு தகுதி பெற்ற நியூஸிலாந்து மகளிர் அணி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US