இந்தியாவுக்கு சென்றுள்ள இலங்கை கடற்படைத் தளபதி: அமைதிக்காக கூட்டு வழிமுறைகள் குறித்து பேச்சு
இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த ஐந்து நாள் பயணமாக இந்தியா சென்றுள்ளார்.
அதன்படி நேற்று முன்தினம் (23.05.2023) சென்றுள்ள தளபதி வைஸ் அட்மிரல் எதிர்வரும் 27ஆம் திகதி வரை அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கூட்டு வழிமுறைகள்
மேலும் அவர், கேரள மாநிலம் எழிமலையில் உள்ள இந்தியக் கடற்படை கல்லூரியில் இடம்பெற்ற வசந்த காலத்தின் தேர்ச்சி அணிவகுப்புக்குத் தலைமை தாங்கியதாகவும் இந்தியத் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
அத்துடன், அவர் இந்தியக் கடற்படை தலைமை அட்மிரல் ஆர் ஹரி குமாரை சந்தித்து, பிராந்தியத்தில் அமைதியை உறுதி செய்வதற்கான கூட்டு வழிமுறைகள் குறித்து விவாதித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |