யாழில் பல இலட்சம் ரூபாவுக்கு மாம்பழத்தை கொள்வனவு செய்த பெண்
யாழ்ப்பாணம் நாகர்கோவில் முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தின் போது பெண் ஒருவர் 250,000 ரூபாவிற்கு மாம்பழம் ஒன்றை ஏலத்தில் கொள்வனவு செய்துள்ளார்.
கடவுளுக்குப் படைக்கும் மாம்பழங்களை, உண்பதற்காக அல்லாமல், மாம்பழத்தை வெள்ளைத் துணியில் சுற்றி, வீட்டின் முன் கதவுக்கு மேலே தொங்கவிடுவதாக தெரியவந்துள்ளது.
இதன்மூலம், வீட்டிற்கு செழிப்பு வரும் என்ற நம்பிக்கையில் மக்கள் கொள்வனவு செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.
மாம்பழ ஏலம்
கடந்த வாரம் வவுனியாவிலுள்ள இரண்டு ஆலயங்களில் நடைபெற்ற இவ்வாறான 2 ஏலங்களில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் மற்றும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாவிற்கு பக்தர்களால் கொள்வனவு செய்யப்பட்டன.
சமகாலத்தில் வடபகுதியிலுள்ள கோவில்களில் வருடாந்த பூஜை மாதம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகின்றன.
பழக் கூடை
தெய்வங்களுக்குப் படைக்கப்பட்ட பழக் கூடையில் உள்ள பழங்களின் ஏலம் நள்ளிரவில் தொடங்குகிறது. மேலும் பழக் கூடையில் உள்ள மாம்பழங்கள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த தக் லைஃப்.. இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல் - உலக பொருளாதாரத்தை அதிரவைக்கும் தாக்கம் News Lankasri
