திரைமறைவில் பசில் வகுக்கும் திட்டம் - செய்திகளின் தொகுப்பு(Video)
ஒரு வருடகாலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலை அடுத்த வருடம் மார்ச் மாதம் நடத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு தயாராகுமாறு அண்மையில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.
இதனிடையே தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச, தனது கட்சியை மறுசீரமைத்து எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற திட்டங்களை வகுத்து வருகிறார்.
இரட்டை குடியுரிமையாளரான பசில் ராஜபக்ச தற்போது ஓய்வெடுப்பதற்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ளதுடன் மீண்டும் இலங்கை திரும்பவுள்ளார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,