கொழும்பு மாநகர சபையை இழக்குமா அநுர தரப்பு..! வியூகம் வகுக்கும் சஜித்
நாடு முழுவதும் நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஆளும் கட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதில் சிக்கல் நிலையை எதிர்நோக்கியுள்ளது.
இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளுக்கு அமைய 94 மன்றங்களில் பெரும்பான்மையுடன் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
ஏனைய மன்றங்களில் கூட்டணி மூலம் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபை
அதேவேளை, எதிர்க்கட்சியும் நெருக்கமான பெறுபேறுகளை பெற்றுள்ள நிலையில் அவர்களும் கூட்டணி அமைப்பதற்கான பேச்சவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை கைப்பற்றுவதில் தேசிய மக்கள் சக்திக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
பெரும்பான்மை
இவ்வாறான சூழ்நிலையில் கொழும்பு மாநகர சபையில் முழுமையான பெரும்பான்மையைப் ஆளும் தரப்பினால் பெற முடியவில்லை என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதாவது, எதிர்க்கட்சி ஒன்றுபட்டால், தேசிய மக்கள் சக்தி நகராட்சியின் பொறுப்பை ஏற்பதைத் தடுக்க முடியும்.
முஜிபுர் ரஹ்மானின் பேஸ்புக் பதிவின் படி தேசிய மக்கள் சக்தி 48 ஆசனங்களையும் எதிர்கட்சிகள் 69 ஆசனங்களையும் பெற்றுள்ளன.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 16 மணி நேரம் முன்
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam