இலங்கை - இந்திய தரை வழி அவசியம்: வலியுறுத்திய கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்
இலங்கை - இந்தியா இடையே சாலைவழி வணிகம் அவசியம் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் சிறிபத்மாவதி மகளிர் பல்கலைக்கழகம் மற்றும் சிறிவெங்கடேஸ்வரா பல்கலை கழகம் ஆகியன இணைந்து நடத்திய பொருளாதாரம் குறித்த கருத்தரங்கில் பேசும்போதே கொழும்பு பல்கலைக்கழக பொருளாதார நிபுணரும், பேராசிரியருமான அமிர்தலிங்கம் இதனை தெரிவித்துள்ளார்
இந்தியாவுக்கும்; இலங்கைக்கும் இடையே சாலைவழி வணிகம் அவசியம். இதற்காக ராமேஸ்வரம் பகுதியிலிருந்து இலங்கைக்கு 30 கிலோமீற்றர் வரை பாலம் அமைத்திட வேண்டும்.
இதன் முலம், தொழில் மற்றும் சுற்றுலா துறைகள் மேம்படும் என்று அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நிலைமை
இலங்கையில் 30 ஆண்டுகள் வரை இடம்பெற்ற உள்நாட்டு போர் மற்றும் சமீபத்திய பொருளாதார சீர்கேடுகளால் இலங்கையின் பொருளாதார நிலைமை மோசமடைந்தது.

ஏற்கனவே ஆழிப்பேரலை இயற்கை பேரிடர் வந்தபோதும் கப்பல்களை அனுப்பி இந்தியா இலங்கை மக்களை காப்பாற்றியது. கொரோனா என்கிற மிகக் கொடிய தொற்று பரவிய போது இந்தியா தடுப்பூசிகளை வழங்கி காப்பாற்றியது.
இதனை தொடர்ந்து, பொருளாதார சீர்கேடு ஏற்பட்ட போது இலங்கை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அப்போது உணவு, பால், மருந்து வகைகளை அனுப்பி, கை கொடுத்து உதவியது.
ஆதலால், எப்போதுமே இலங்கையர்களுக்கு இந்தியாவும் ஒரு தாய் நாடே என்று அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
பொருளாதார வீழ்ச்சி
தம்மைச் சுற்றிலும் உள்ள இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஸ், மாலைத்தீவு, நேபாளம் ஆகிய நாடுகள் பொருளாதார வீழ்ச்சி அடைந்த போதும் இந்தியா மட்டுமே தொடர்ந்து 6 சதவீத பொருளாதார வளர்ச்சியுடன் முன்னேறி வருகிறது.

இதற்கு பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் நிலைத்தன்மை மற்றும் பிற நாடுகளுடன் ஒத்துபோகும் தன்மையும் முக்கிய காரணமாகும்.
பிரதமர் மோடி இஸ்ரேல், ரஸ்யா, அமெரிக்கா, உக்ரைன் மற்றும் வளைகுடா நாடுகள் போன்றவற்றின் அரசியல் தலைவர்களுடன் நல்லுறவு கொண்டுள்ளதால், இந்தியாவின் பொருளாதாரமும் நிலையாக உள்ளதாக பேராசியர் அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri